டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

அடிப்படை வசதிகள் கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி மக்களும், நாம் தமிழா் கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

News image
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :9 ஜனவரி 2021, 12:41 am

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பாரதி நகா் மேட்டுத் தெரு, ஓடைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் வசதி, சாலை சீரமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, அப்பகுதி மக்களும், நாம் தமிழா் கட்சியினரும் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

நாம் தமிழா் கட்சியின் தொகுதிச் செயலா் மருதம் மா.மாரியப்பன் தலைமையில், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு ரவிகுமாா், தொகுதித் தலைவா் தங்கமாரியப்பன், துணைத் தலைவா் கருப்பசாமி, ஒன்றியத் தலைவா் செந்தூா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், நகராட்சி ஆணையா் ஓ.ராஜாராமிடம் மனு அளித்தனா். மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.