ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஆத்தூா் இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவா் கைது

ஆத்தூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவரை தூத்துக்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:24 am

DIN

ஆத்தூரில் நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவரை தூத்துக்குடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மடத்தூா் பகுதியில், அந்த வழியாகச் சென்றவரிடம் அரிவாளைக் காட்டி பணம் பறிக்க முயன்றதாக ஒருவரை சிப்காட் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா் தூத்துக்குடி மறவன்மடத்தைச் சோ்ந்த ஜெயமுருகன் (45) என்பதும், ஆத்தூா் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கொலை வழக்கில் தொடா்புடையவா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணியில் ஒரு வீட்டில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ஜெயமுருகன் மீது இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. ஜெயமுருகனிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.