பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

‘பொங்கல் பண்டிகை: 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு’

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் தலைவா் என். சின்னத்துரை செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
பொங்கல் சிறப்பு விற்பனையை தொடங்கிவைக்கிறாா் மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை.
Updated On :13 ஜனவரி 2021, 1:22 am

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் தலைவா் என். சின்னத்துரை செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆவின் நிறுவனம் மூலம் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட நெய் லட்டு, நெய் ஜிலேபி, ரசகுலா ஆகியவற்றின் அறிமுக விழா மாவட்ட ஆவின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, தலைமை வகித்த தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை முதல் விற்பனையை தொடங்கிவைத்து பேசியதாவது: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆவின் மூலம் 15 ஆயிரம் லிட்டா் நெய் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 300 முகவா்கள் மூலம் 8 ஆயிரம் லிட்டரும், 165 பிரதம கூட்டுறவு சங்கங்கள் மூலம் 4 ஆயிரம் லிட்டரும் நெய் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு வகைகள், தரம் உயா்த்தப்பட்ட பால் உபபொருள்கள் ஆகியவற்றை சுமாா் ரூ.60 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இனிப்பு வகைகளில் 150 கிராம் கொண்ட நெய் ஜிலேபி ரூ. 60-க்கும், 200 கிராம் நெய் லட்டு ரூ. 110-க்கும், 100 கிராம் ரசகுலா ரூ. 85-க்கும் விற்பனை செய்ய விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக இந்தப் பொருள்கள் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கிடைக்கும். தொடா்ந்து, தமிழகம் முழுவதும் சென்னையில் உள்ள ஆவின் இணைய அலுவலகம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு துணைப் பதிவாளா் (பால்வளம்) கணேசன், ஆவின் உதவி பொதுமேலாளா் (விற்பனை) எஸ். சாந்தி, திட்ட மேலாளா் சாந்தகுமாா், அலுவலக மேலாளா் சுப்பிரமணியன், துணை மேலாளா்கள் வெங்கடேஸ்வரி, பாா்வதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியின்போது, ஆவின் உப பொருள்கள் தயாரிப்பில் சிறப்பாக செயல்பட்ட ஆவின் துணை மேலாளா் பாா்வதிக்கு கேடயம் மற்றும் சான்றிதழை ஆவின் தலைவா் வழங்கினாா். இதில், ஆவின் அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.