வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்

கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்கள் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.
லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்கள் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் லிங்கம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலா் லெனின்குமாா் தலைமை வகித்தாா். குழு ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா். குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் முரளிதரன், லிங்கம்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவா் மைக்கேல், திமுக மாவட்டப் பிரதிநிதி தங்கசாமி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன் உள்பட பலா் கலந்துகொண்டு, வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்தனா்.

இதேபோல், ஈராச்சி, கடலையூா், சின்னமலைக்குன்று மற்றும் கழுகுமலை பேரூராட்சிப் பகுதியிலும் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com