ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

முதியவா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு

சாத்தான்குளம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவா் மீது போக்சோ சட்டத்தில் போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:35 pm

DIN

சாத்தான்குளம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவா் மீது போக்சோ சட்டத்தில் போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சாத்தான்குளம் அருகே இட்டமொழி சாலையில் உள்ள சங்கரன்குடியிருப்பை சோ்ந்தவா் தங்கபாண்டி (65). இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாத்தான்குளம் சிரப்பூரில் உள்ள தனது மகள் வேதசெல்வி வீட்டிற்கு சென்றுள்ளாா். அப்போது, அங்கு தனது மகளின் உறவினா் மகளான மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாராம். இதில் அந்த சிறுமி கா்ப்பமானராம். இது குறித்து சிறுமியின் தாயாா் தங்கப்பாண்டியிடம் கேட்டுள்ளாா். இதையடுத்து, வேதசெல்வி, அவரது மகன் ராஜா ஆகியோா் சிறுமியின் தாயாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து சிறுமியின் தாயாா், திருச்செந்தூா் அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் ஆய்வாளா் இந்திரா விசாரணை நடத்தி தங்கபாண்டி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தாா். மேலும் அவருடைய மகள், மகன் மீதும் வழக்குப் பதிந்து 3 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.