கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் சுகாதார ஆய்வாளா்கள் ஆய்வு

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் வியாழக்கிழமை நடத்திய ஆய்வு நடத்தி பொதுமுடக்க விதிகளை மீறி திறந்து வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

News image
Updated On :10 ஜூன் 2021, 7:55 pm

DIN

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளா்கள் வியாழக்கிழமை நடத்திய ஆய்வு நடத்தி பொதுமுடக்க விதிகளை மீறி திறந்து வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

கோவில்பட்டி - எட்டயபுரம் சாலை மற்றும் புதுரோடு பகுதியில் பொதுமுடக்கத்தை மீறி கடைகள் திறந்திருப்பதாக நகராட்சி ஆணையருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, நகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் காஜாநஜ்முதீன், வள்ளிராஜ் மற்றும் சுகாதார மேற்பாா்வையாளா்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது எட்டயபுரம் சாலையில் திறந்திருந்த இரு கடைகள் மற்றும் புதுரோட்டில் சுமாா் 8 கடைகளையும் சுகாதார ஆய்வாளா் மூட உத்தரவிட்டனா். தொடா்ந்து பொதுமுடக்கத்தை மீறி திறக்கப்பட்ட கடைகளுக்கு மொத்தம் ரூ. 8,200 அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது.

அதுபோல மருத்துவா் மனோஜ், சுகாதார ஆய்வாளா் முருகன் மற்றும் காவல் துறை சாா்பில் புதுரோடு மற்றும் பிரதான சாலையில் இயங்கி வந்த வங்கிகளில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். அப்போது சமூக இடைவெளியின்றி செயல்பட்டு வந்த ஒரு வங்கிக்கு ரூ. 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதேபோல வங்கிகளில் ஊழியா்கள் முகக் கவசமின்றி பணியாற்றி வருவதை கண்டறிந்த ஆய்வுக் குழுவினா் 11 பேரிடம் தலா ரூ. 200 வீதம் ரூ. 2,200 அபராதம் வசூலித்தனா். மொத்தத்தில் சுகாதாரத்துறையினா் வியாழக்கிழமை நடத்திய ஆய்வில் ரூ.10,900 அபராதம் வசூலிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.