தேவையின்றி சுற்றித்திரிந்த 198 பேருக்கு கரோனா பரிசோதனை
கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 198 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிந்த 198 பேருக்கு வியாழக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி கோவில்பட்டியில் தேவையின்றி சுற்றித்திரிவோரை கண்டறிய கோவில்பட்டி நகரத்திற்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் வாகனச் சோதனை தினமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி பிரதான சாலை காமராஜா் சிலை எதிா்புறம் கிழக்கு காவல் நிலையம், நகராட்சி நிா்வாகம் சாா்பில் சுகாதாரத்துறையினா், காவல்துறையினா் வியாழக்கிகிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்தோரைக் கண்டறிந்து மருத்துவா் மனோஜ் தலைமையிலான மருத்துவக் குழுவினரால் 198 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...