அங்கக பண்ணையம் முறை: விவசாயிகளுக்குப் பயிற்சி
நாலாட்டின்புதூா் கிராம விவசாயிகளுக்கு காணொலி மூலம் அங்கக பண்ணையம் முறை குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.


நாலாட்டின்புதூா் கிராம விவசாயிகளுக்கு காணொலி மூலம் அங்கக பண்ணையம் முறை குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
வேளாண்மைத் துறை அட்மா மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பிற்கு, மாவட்ட வேளாண்மை துணை இயக்குநா் ஜெயசெல்வின் இன்பராஜ் தலைமை வகித்து, பயிற்சியை தொடங்கிவைத்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ் அங்கக பண்ணையம் சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் மற்றும் பேராசிரியா் பாஸ்கா் அங்கக பண்ணையம் முறை தொழில்நுட்பங்கள் குறித்தும், வேளாண்மை அலுவலா் ரீனா வேளாண்மைத் திட்டங்கள் குறித்தும் பயிற்சியளித்தனா்.
ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் செல்வராஜ் மற்றும் அட்மா திட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...