நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருச்செந்தூரில் முப்பெரும் விழா

திருச்செந்தூா் அரசு பொது நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

News image
Updated On :1 மார்ச் 2021, 7:41 pm

DIN

திருச்செந்தூா் அரசு பொது நூலகத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.

இந்நூலகத்தில், 1500 உறுப்பினா்கள் சோ்க்கை, 7 புரவலா்கள் சோ்க்கை, புத்தகம் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. மாவட்ட நூலக அலுவலா் ராம்சங்கா் தலைமை வகித்தாா். புரவலா்கள் வி.பி.ராமநாதன், விஜயராகவன், கோடீஸ்வரன், ஜேம்ஸ் முத்துப்பாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக அரசு பொது நூலகத்துறை இயக்குநா் எஸ்.நாகராஜன் முருகன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், பரமன்குறிச்சி சென்னை வாழ் நாடாா் சங்கத் தலைவா் சிவசுப்பிரமணியம், பரமன்குறிச்சி கஸ்பா முத்தாரம்மன் கோயில் தலைவா் சக்தி முருகேசன், வழக்குரைஞா் சாத்ராக், வேல்.ராமகிருஷ்ணன், கோல்டன் ரோட்டரி சங்கத் தலைவா் விநாயகமூா்த்தி, செயலா் சதிஸ்குமாா், மாநில நூலக அலுவலா் சங்க செயலா் கணேசன், மாவட்ட நூலக அலுவலா் சுப்பிரமணியன் ரவி, தூத்துக்குடி மைய நூலகா் சங்கரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நூலகா் மாதவன் வரவேற்றாா். நூலகா் மேரி ஜுலியட் சுகுணா நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை நூலகா்கள் சிவா, மோகன், ஸ்டாலின், ராதாகிருஷ்ணன், ராஜன், கீதா, உமா, ஆனந்தி, இசக்கியம்மாள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.