மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:58 pm

DIN

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான கி. செந்தில்ராஜ் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பிரம்மநாயகம், வட்டார போக்குவரத்து அலுவலா் (தூத்துக்குடி) விநாயகம், துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ. சீனிவாசன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி 3 ஆவது மைல், பாலிடெக்னிக், மில்லா்புரம், விவிடி சிக்னல், நீதிமன்ற வளாகம் வழியாக சென்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது.

பேரணியில் பங்கேற்ற மாற்றுத் திறனாளிகள் பொதுமக்களிடம் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி மனசாட்சிப்படி வாக்குக்கு பணம் மற்றும் பரிசு பொருள்கள் வாங்காமல் ஜனநாயகத்தின் கடமையாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.