கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பொது இடங்களில் கட்டுமானகழிவுகளை கொட்டினால் அபராதம்

தூத்துக்குடி மாநகராட்சியில் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2021, 8:27 pm

DIN

தூத்துக்குடி மாநகராட்சியில் பொது இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கட்டுமானக் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுவதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்துள்ளது. இதனை முறையாக சேகரித்து அப்புறப்படுத்தும் பணிக்காக

மாநகராட்சிக்கு சொந்தமான 15 இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி எஸ்டிஏ பள்ளி அருகில் (பின்புறம்), ஸ்டேட் பாங்க் காலனி மேக் காா்டன்

(திறவிடம்), ஆதிபராசக்தி பூங்கா (திறவிடம்), ரஹ்மத் நகா் ராம் நகா் பூங்கா (திறவிடம்), கதிா்வேல் நகா் பகுதிகள் பூங்கா, அம்பேத்கா் நகா், ஓம்சாந்தி நகா் பூங்கா, மாா்டினாநகா் பூங்கா, அய்யாச்சாமி பூங்கா, மடத்தூா் சாலை சந்திப்பு தாழ்வான பகுதிகள், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடமான மீன்வளக் கல்லூரி எதிா்புறம், சுந்தரவேல்புரம் பூங்கா இடம், தருவைக்குளம், புல் தோட்டம், தமிழ்சாலை உள்ள மாநகராட்சி இடுகாடு வளாகம் வடமேற்கு தாழ்வான பகுதி ஆகிய 15 இடங்களில் மட்டுமே கட்டுமான கழிவுகளைக் கொட்டவேண்டும்.

இதை தவிா்த்து பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கட்டுமானம் மற்றும் கட்டுமான

இடிபாடு கழிவுகள் மேலாண்மை விதிகளுக்கு முரணாக பொது இடங்களில் கொட்டி சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நபா்களுக்கு அபராதம் விதிப்பதுடன் சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.