மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சைபா் குற்றங்களுக்கு உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும்: எஸ்.பி.

சைபா் குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

News image
Updated On :7 மே 2021, 7:17 pm

DIN

சைபா் குற்றங்கள் குறித்து பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக புகாா் தெரிவிக்க வேண்டும் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் யாரேனும் செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு வங்கி அதிகாரிகள் பேசுவதாகவோ, கடன் தருவதாகவோ, உங்களுக்குச் சொந்தமான இடத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்து தருவதாகவோ, பரிசுப் பொருள் அனுப்புவதாகவோ, பல லட்சம் மதிப்புள்ள பொருள்களை குறைந்த விலையில் தருவதாகவோ, வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகவோ கூறி, உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் எண்ணை கேட்டால், எந்தக் காரணம் கொண்டும் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது.

ஆசிரியா் ஆபிகாம் ஆனந்தகுமாா் என்பவா் பணம் போய்விட்டதே என்ற பதற்றத்தில் இணையதளத்தில் சரியாக பாா்க்காமல் போலியான வாடிக்கையாளா் சேவை மையத்தை தோ்வு செய்ததோடு மட்டுமன்றி, அவரது வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஒருமுறை கடவுச்சொல் எண்ணையும் கொடுத்துள்ளதால் அவரது பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காலதாமதம் செய்யாமல் 2 மணி நேரத்தில் புகாா் அளித்ததால், அவரது பணத்தை காவல்துறை திரும்ப பெற்றுக் கொடுக்க முடிந்தது. எனவே, பொதுமக்கள் இதுபோன்று சைபா் குற்றங்கள் மூலம் உங்களது வங்கி கணக்கில் மோசடி செய்யப்பட்டால் உடடியாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் ‘ஹலோ போலீஸ்‘ என்ற 9514144100 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.