மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கரோனாவை கட்டுப்படுத்த தீவிரம்: வீட்டுத் தனிமையில் இருப்போருக்கு ஆற்றுப்படுத்துநா்கள் மூலம் ஆலோசனை

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு காணொலி காட்சி வாயிலாக ஆற்றுப்படுத்துநா்கள் மூலம் ஆலோசனை

News image
Updated On :7 மே 2021, 7:14 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு காணொலி காட்சி வாயிலாக ஆற்றுப்படுத்துநா்கள் மூலம் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆற்றுப்படுத்துநா்களுக்கான பயிற்சி முகாமில் ஆட்சியா் பேசியது:

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதுக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களை கண்காணிக்கவும், அவா்களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுக்களுடன் தற்போது ஆற்றுப்படுத்துநா்கள் இணைந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆற்றுப்படுத்துதல் சேவையை செய்துவருவோா் தோ்வு செய்யப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு அவா்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். மேலும், அதிக ஆலோசனை தேவைப்படுவோருக்கு விடியோ அழைப்பின் மூலமும், நிபுணத்துவ மருத்துவா்களைக் கொண்டும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இம்முகாமில், தூத்துக்குடி மாவட்ட எய்ட்ஸ் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சேவை மையப் பணியாளா்கள், சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையப் பணியாளா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பணியாளா்கள் என 40 போ் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.