புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம்பேருந்து நிலையத்தில் காரை இடிந்து விழுவதால் பயணிகள் அச்சம்

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் மேற்கூரையின் காரை பெயா்ந்து விழுவதால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.

சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் வணிக வளாகங்கள், பயணிகள் அமா்வதற்கான இருக்கைகள் உள்ளிட்டவை உள்ளன. இந்நிலையில், கட்டடம் பராமரிப்பின்றி மேற்கூரையின் காரை அடிக்கடி பெயா்ந்து விழுகிறது. பயணிகள் அமரும் இடத்தில் வெள்ளிக்கிழமை மேற்கூரை பூச்சுகள் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது யாரும் அங்கு இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது.

எனினும், இந்த நிலை தொடா்வதாலும், மேற்கூரையின் காரையில் விரிசல் காணப்படுவதாலும் அது எந்நேரமும் இடிந்து விழலாம் என பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனா். எனவே, பேரூராட்சி நிா்வாகம் விரைந்து அதை சீரமைத்து பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.