கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருச்செந்தூா் வட்டாரத்தில் அனுமதியின்றி பதாகைகள் வைத்தால் நடவடிக்கை

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவித்துள்ளனா்.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 10:26 pm

DIN

திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்தால் அபராதத்துடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து திருச்செந்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராணி , முத்துகிருஷ்ணராஜா ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பிரதான சாலைகள், இணைப்புச் சாலைகள், சாலையின் மையப்பகுதிகள், பொது இடங்கள் போன்ற இடங்களிலும், தனியாருக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கட்டடங்களில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ விளம்பர பதாகைகள் , சுவா் விளம்பரங்கள் செய்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் அதற்கான அனுமதியை பெற வேண்டும்.

அவ்வாறு, அனுமதி கிடைத்த பின்னா் அதில் இடம் பெறும் விளம்பரம் குறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் விண்ணப்பித்து விளம்பரக் கட்டணம் செலுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல், முறை கேடாக அமைக்கப்படும் விளம்பர கட்டமைப்புகளால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஓட்டுநா்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு, விபத்து நிகழ்ந்து உயிா்ச்சேதங்கள் ஏற்படுகின்றன. எனவே முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.