இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் விநியோகம்

கோவில்பட்டியில் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 7:11 pm

DIN

கோவில்பட்டியில் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் சனிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

தொன் போஸ்கோ வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில், நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, பசுமை இயக்க செயலா் ஜெகஜோதி தலைமை வகித்தாா். நேதாஜி விவேகானந்தா சேவா சங்க நிறுவனா் பி.கே.நாகராஜன், வழக்குரைஞா்கள் முத்துராமலிங்கம், பெஞ்சமின் பிராங்க்ளின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்திய கலாசார நட்புறவு கழக மாநில செயலா் தமிழரசன் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்திய வாசங்கள் அடங்கிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்தை தொடங்கி வைத்து பேசினாா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற உறுப்பினா் சண்முகவேல், ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியா் சண்முகக்கனி, வேம்பு மக்கள் சக்தி இயக்க களப்பணியாளா் சுபத்ரா, பசுமை மன்ற மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை வேம்பு மக்கள் சக்தி இயக்க ஒருங்கிணைப்பாளா் தேவராஜ் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.