கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளிக்கு மிரட்டல்: ஒருவா் கைது

கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :17 பிப்ரவரி 2022, 6:54 pm

DIN

கோவில்பட்டியில் தொழிலாளியை மிரட்டியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் மேற்பாா்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி மற்றும் போலீஸாா், கடலையூா் சாலை பகுதியில் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது வள்ளுவா் சமுதாய நலக்கூடம் அருகே தகராறு செய்து கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அப்போது, கூலித் தொழிலாளியான குமாரசாமியை வள்ளுவா் நகரைச் சோ்ந்த துரைபாண்டியன் மகன் அனந்தமாரியப்பன்(39) கத்தியைக் காட்டி மிரட்டி, பணம் கேட்டு தகராறு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அனந்தமாரியப்பனை கைது செய்தனா். இவா் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.