விதிமீறி மது விற்பனை: 4 போ் கைது
கோவில்பட்டி, கழுகுமலையில் விதிமுறை மீறி மதுபானம் விற்ாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.


கோவில்பட்டி, கழுகுமலையில் விதிமுறை மீறி மதுபானம் விற்ாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டியை அடுத்த திட்டங்குளம் முத்துநகா் பகுதியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சிலுவை அந்தோணி தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மலையரசன் மகன் அன்பரசன்(27) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல், கழுகுமலை ஓடைத் தெருவில் மது விற்ாக, கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெரு சுப்புகுட்டி மகன் சரவணன்(44) , செந்தூா் நகரில் மது விற்ாக கரடிகுளம் சி.ஆா்.காலனி முனியாண்டி மகன் தம்பிராஜ் (56) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மூவரிடமிருந்தும் 380 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புன்னைக்காயல் பகுதியில் ஆத்தூா் காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கராஜ் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள நூறு வீடு தெருவில் மது விற்ாக சுடலைராஜ்(27) என்பவரை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...