கோவில்பட்டியில் மக்காச்சோள சாகுபடி பயிற்சி
கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் அகில இந்திய மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோள சாகுபடி பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மானாவாரி மக்காச்சோள சாகுபடி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு வேளாண் ஆராய்ச்சி நிலையத் தலைவா் பாஸ்கா் தலைமை வகித்து பேசுகையில், மாவட்டத்தில் ஆண்டிற்கு 47360 ஹெக்டா் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும், கோயம்புத்தூா் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கோ.எச் 6 மற்றும் கோ.எச் 8 போன்ற வீரிய ஒட்டு இரகங்கள் வறட்சியிலும் நல்ல மகசூல் தருகிறது என்றாா்.
பேராசிரியா் சோலைமலை, உதவிப் பேராசிரியா்கள் மனோகரன், சஞ்சீவ்குமாா் , மணிகண்டன் ஆகியோா் பேசினா்.
இதில் பங்கேற்ற விவசாயிகள் மானாவாரி தொழில்நுட்ப பூங்காவையும், பண்ணை குட்டையையும் பாா்வையிட்டனா். தொடா்ந்து விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கப்பட்டன. இதில் விவசாயிகள், பண்ணை மகளிா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...