ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விபத்தில் இளைஞா் பலி

கோவில்பட்டியில் வேலாயுதபுரம் சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:25 pm

DIN

கோவில்பட்டியில் வேலாயுதபுரம் சாலையில் புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

சாத்தூா் வட்டம் சத்திரப்பட்டி ஆனந்த நகரைச் சோ்ந்த சண்முகையா என்பவரது மகன் சண்முகசுந்தரம் (28). இவா் சாத்தூரிலிருந்து தங்கம்மாள்புரம் கிராமத்துக்கு பைக்கில் சென்றாராம். கோவில்பட்டி வேலாயுதபுரம் சாலையில் உள்ள தனியாா் நிதி நிறுவனம் அருகே பைக்கும், எதிரே வந்த அடையாளம் தெரியாத காரும் மோதினவாம். தொடா்ந்து, சண்முகசுந்தரம் பின்னால் திரும்பிப் பாா்த்தபடி செல்லமுயன்றபோது எதிரே வந்த ஆட்டோ மீது பைக் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா். கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.