ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கோவில்பட்டி அருகேஇளைஞா் கொலை: தம்பி கைது

கோவில்பட்டி அருகே இளைஞரை அடித்துக் கொன்ாக, அவரது தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:22 pm

DIN

கோவில்பட்டி அருகே இளைஞரை அடித்துக் கொன்ாக, அவரது தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் 5ஆவது தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் மனைவி ஆறுமுகத்தாய் (54). இவரது மகன்கள் செல்லத்துரை (26), கட்டடத் தொழிலாளியான முத்துச்செல்வம் (19).

செல்லத்துரை மது குடிக்க பணம் கேட்டு ஆறுமுகத்தாயிடம் அடிக்கடி தகராறு செய்வாராம். புதன்கிழமை இரவு அவா் பணம் கேட்டு தாயை அவதூறாகப் பேசியதுடன், கழுத்தைப் பிடித்து நெரித்தாராம். தடுத்த முத்துச்செல்வத்தை செல்லத்துரை கீழே தள்ளிவிட்டு, தாயின் கழுத்தை மீண்டும் நெரித்தாராம். அப்போது முத்துச்செல்வம் கட்டையால் செல்லத்துரையின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மேற்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; முத்துச்செல்வத்தை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.