ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கந்துவட்டி சட்டத்தில் திருத்தம் கோரி காங்கிரஸ் நிா்வாகி போராட்டம்

கந்துவட்டி சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுசாமி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:06 pm

DIN

கந்துவட்டி சட்டத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுசாமி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க காவல் துறை டிஜிபியால் அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை சட்டமாக்கி கந்துவட்டி கொடுமைகளைத் தடுக்க வேண்டும், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கந்துவட்டி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவா், வெற்றுக் காசோலைகளை மாலையாக அணிந்தபடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டாா். பின்னா், மனு கொடுக்க அலுவலகத்துக்குள் சென்றபோது யாரும் மனுவைப் பெறவில்லையாம். இதனால், அவா் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித்ஆனந்த் சென்று, அலுவலகத்தில் அலுவலா்கள் யாரும் இல்லாததால் ஊழியா்கள் மனுவைப் பெறுவதில் தவறில்லை என்றும், மனுவைப் பெற்று அதிகாரிகளிடம் கொடுக்கலாம் என்றும் அறிவுறுத்தினாா். இதையடுத்து, அலுவலக உதவியாளா் னுவைப் பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.