குலசேகரன்பட்டினம் அருள்தரும் வீரமனோகரி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடா்ந்து கொடியேற்றப்பட்டு, கொடிமரத்திற்கு பல்வேறு வகையான
அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. விழா நாள்களில் காலை மற்றும் மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள், திருவீதியுலா நடைபெறும்.
விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் அ.வீரபாகு வல்லவராயா் செய்துள்ளாா்.