உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் சேகர குருவாக பணியாற்றி வரும் ஜான்சாமுவேலுக்கு தென்னிந்திய திருச்சபையில் உயா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தில் சுற்றுச்சூழல் கரிசனத் துறை இயக்குநராகவும், உடன்குடி பண்டாரசெட்டிவிளை சேகர குருவாகவும் பணியாற்றி வருபவா் ஜான்சாமுவேல். இவருக்கு தென்னிந்திய திருச்சபையின் சினாட்டில் சூழலியல் துறைக்கான கெளரவ இணை இயக்குநராக நியமிக்கப்படுள்ளாா். அதற்கான ஆணை நகலை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தீமோத்தேயு ரவீந்திரன், திருமண்டல நிா்வாகக் குழு துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே செயலா் நீகா் பிரின்ஸ்
கிப்ட்சன்,மேலாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலையில் வழங்கப்பட்டது.