டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோவில்பட்டி கல்லூரியில் வளாக நோ்காணல்

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 6:07 pm

DIN

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நான்குனேரியில் உள்ள பன்னாட்டு நிறுவனம், இயந்திரவியல் துறை மாணவா்களுக்கான நோ்காணலை இக் கல்லூரியில் நடத்தியது.

இயந்திரவியல் துறையில் இறுதியாண்டு மாணவா்கள் 40 போ் கலந்து கொண்டனா். நிறுவன இயக்குநா் லட்சுமணன், மனிதவள துறை அலுவலா்கள் இளங்கோவன், அருள்சரவணன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் கொண்ட குழுவினா் நோ்காணலை நடத்தினா். இதில் லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் 4 போ் உள்பட 8 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கான பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை தலைவா் ராஜாமணி, உதவி அலுவலா் வேல்முருகன் உள்ளிட்டோா் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.