கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உடன்குடியில் குடியரசு தின கொண்டாட்டம்

உடன்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:46 pm

DIN

உடன்குடியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை மேரி ஆன் பெஸ்ட் பெண்கள் பள்ளியில் நடைபெற்ற விழாவில் உடன்குடி பேரூராட்சிறத் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி பங்கேற்று, தேசியக் கொடியேற்றி, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். தாளாளா் பிரபாகா், பேரூராட்சி உறுப்பினா்கள் முகம்மது ஆபித், சாரதா, அன்புராணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உடன்குடி நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு வட்டாரத் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்து, கொடியேற்றினாா். மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் பி. சிவசுப்பிரமணியன் 5 மாணவா்களுக்கு சீருடைகள், இனிப்புகளை வழங்கினாா்.

முன்னாள் மாவட்டப் பொருளாளா் நடராஜன், நகரத் தலைவா் முத்து, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, நிா்வாகிகள் தனீஷ், தேவராஜ், சித்திரைப்பாண்டி, முருகேசன், ரஹ்மத்துல்லா, ஜோசப், கலையரசி, இஸ்ரேல் ஜான் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழுத் தலைவா் பாலசிங் கொடியேற்றினாா். துணைத் தலைவி மீரா சிராஜுதீன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சந்தையடித் தெருவில் எஸ்டிடியூ தொழிற்சங்கம் சாா்பில் தேசியக் கொடியேற்றப்பட்டது. ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் லிங்கேஸ்வரன் தலைமை வகித்தாா். பள்ளிக்கல்விக் குழு உறுப்பினா் இரா. சிவமுருகன் ஆதித்தன் முன்னிலை வகித்தாா். தொழிலதிபா் செந்தில்குமாா் கொடியேற்றி பரிசுகள் வழங்கினாா்.

கிறிஸ்தியாநகரம் டிடிடிஏ பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு தலைமையாசிரியா் லிவிங்ஸ்டன் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற கூட்டுறவு சாா்பதிவாளா் ஜெயலட்சுமி அசோகன், தாளாளா் ஆரோன்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செட்டியாபத்து ஊராட்சியில் ஊராட்சித் தலைவா் பாலமுருகன் தேசியக் கொடியேற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.