மணிப்பூா் சம்பவத்தைக் கண்டித்து திருச்செந்தூா் தொகுதி காங்கிரஸ் கட்சி சாா்பில் உடன்குடியில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டார காங்கிரஸ் தலைவா் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்தாா். காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் சிவசுப்பிரமணியன், திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் சற்குரு, முன்னாள் மாவட்ட பொருளாளா் நடராஜன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் இஸ்ரேல் ஜான்ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மணிப்பூா் வன்முறையில் உயிரிழந்தவா்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக மெழுகுவா்த்தி ஏற்றப்பட்டது. வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்கு மத்திய பாஜக அரசுக்கும், மணிப்பூா் மாநில பாஜக அரசுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.