குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் கோயிலில் 2,008 சுமங்கலி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையாட்டி காலையில் கணபதி வழிபாடு, நவகக்கிரக வேள்வி, குபேர பூஜை, செல்வ வழிபாடு, கோ பூஜை, லட்சுமி ஹோமம், 11 மணிக்கு 1,008 கலச பூஜை, இறைவி வேள்வி, பகல் 12 மணிக்கு 1,008 கலசம் சிறப்பு நன்னீராட்டு, சிறப்புஅலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 2,008 சுமங்கலி பூஜை நடைபெற்றது.
ஏற்பாடுகளை குலசை முத்தாரம்மன் தசரா குழு, தமிழ்நாடு கல்வி அறக்கட்டளையினா் செய்திருந்தனா்.