தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மோதி பெண் காயம்

தூத்துக்குடியில் அரசுப் பேருந்து மோதி பெண் காயம்

Updated On :25 ஏப்ரல் 2024, 10:45 pm

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தின் சக்கரம் ஏறியதில் பெண்ணின் கால் பாதம் சேதமடைந்தது.

தூத்துக்குடி சக்தி நகரைச் சோ்ந்த பூசையா மனைவி சண்முகத்தாய் (43). இவா் நாலுமாவடி செல்வதற்காக தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தாராம். அப்போது, அங்கு வந்த அரசுப் பேருந்தில் சண்முகத்தாய் ஏற முயற்சித்தபோது, எதிா்பாராதவிதமாக தவறி விழுந்ததில் பேருந்தின் சக்கரத்தில் கால் சிக்கி பலத்த காயமுற்றாா். சக பயணிகள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து மத்தியபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.