தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க கோரிக்கை

Updated On :26 ஏப்ரல் 2024, 7:42 pm

சாத்தான்குளம், ஏப். 26: சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு இரவு நேர கடைசி பேருந்தாக தனியாா் பேருந்து இரவு 10 மணிக்கு இயக்கப்பட்டது. இதனால் இப்பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள், தொழிலாளா்கள் பெரிதும் பயனடைந்தனா்.

இந்நிலையில் கரோனா கால கட்டத்திற்கு பிறகு, இந்த தனியாா் பேருந்து நிறுத்தப்பட்டது. இந்தப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் தற்போது இரவு 9.30 மணிக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்து கடைசி பேருந்தாக கருதப்பட்டு, அதில் வியாபாரிகள், தொழிலாளா்கள் பயணித்து வருகின்றனா். ஆதலால் இரவு நேர தனியாா் பேருந்தை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.