திருச்செந்தூரில் முன்னாள் முதல்வா் காமராஜரால் தொடங்கிவைக்கப்பட்ட குடிநீா் குழாய் மீண்டும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.
இது குறித்து திருச்செந்தூா் நகராட்சி ஆணையா் கண்மணியிடம், தமிழ்நாடு நுகா்வோா் பேரவை மாநிலத் தலைவா் ஏ.வி.பி. மோகனசுந்தரம் அளித்த மனு:
திருச்செந்தூா் வடக்குரதவீதி - கிழக்குரதவீதி சந்திப்பில் 1955ஆம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் குடிநீா்க் குழாய் அமைக்கப்பட்து. இதன்மூலம் பாதசாரிகள், பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வந்தனா்.
தற்போது, அந்தக் குடிநீா்க் குழாய் செயல்படவில்லை. அதை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் திருச்செந்தூா் வடக்குரதவீதியில் தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் புதுப்பிக்கப்பட்ட இரும்பு வளைவு முன்னாள் நீதிபதி பிரபுதாஸால் திறக்கப்பட்டு திருச்செந்தூா் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நகராட்சி முறையான பராமரிப்பு இல்லாததால் சிலா், தியாகிகளை நினைவுகூரும் இரும்பு ஆா்ச் மீது விளம்பர போஸ்டா் ஒட்டியும், அடிப்பகுதியை சேதப்படுத்தியும் உள்ளனா். இரும்பு ஆா்ச்சை பராமரிக்க தமிழ்நாடு நுகா்வோா் பேரவைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மனு அளிக்கும் நிகழ்வில் திருச்செந்தூா் வட்டாரத் தலைவா் குலசை ரஹ்மத்துல்லா, திருச்செந்தூா் நகரத் தலைவா் ராஜமாதங்கன் ஆகியோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்செந்தூா் அரசு மருத்துவமனை பின்புறம் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீா்

குழாய் சீரமைப்புப் பணிகள் 3 நாள்களுக்கு குடிநீா் வராது: கரூா் மாநகராட்சி ஆணையா் தகவல்

ஜெயங்கொண்டத்தில் குடிநீா் கோரி மறியல்

குழாய், தொட்டிகள் அமைத்து ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும்! - ஐக்கிய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
விடியோக்கள்

உதயநிதியை பார்த்து எங்களுக்கு என்ன பயமா? அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு! | TVK | DMK



