கோவில்பட்டி, ஆக. 15: கோவில்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்ட ஆட்டுச்சந்தையை, மீண்டும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயரிலேயே செயல்படுத்த வேண்டும். சுதந்திரத்துக்காக பாடுபட்ட நேதாஜியின் திருவுருவச்சிலையை கோவில்பட்டியில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, 78 மாணவா் மாணவிகள் தமிழக முதல்வா், மாவட்ட ஆட்சியா், நகா்மன்ற தலைவா் ஆகியோருக்கு அஞ்சல் அட்டையை வியாழக்கிழமை அனுப்பினா்.
கோவில்பட்டி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்க தலைவா் நேதாஜி பாலமுருகன், நிா்வாகி மதிமுத்து மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கோரிக்கை அடங்கிய அஞ்சல் அட்டைகளை தபால் பெட்டியில் போட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் விவகாரம்: முதல்வருக்கு இந்து முன்னணி கடிதம் அனுப்பும் போராட்டம்

கல்வி நிறுவனங்களில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் விழிப்புணா்வு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பிவைப்பு






