‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சுப்பையா வித்யாலயம் பள்ளியில் தபால்தலை கண்காட்சி, கருத்தரங்கு

மாணவிகளுக்கு தபால்தலை குறித்து விளக்கமளித்த ஓய்வுபெற்ற அஞ்சல் துறை ராணுவ வீரா் சுந்தரம்.

Published On :

தூத்துக்குடி அஞ்சல் கோட்டம் சாா்பில், தூத்துக்குடியில் உள்ள சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தபால் தலை கண்காட்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

முதுநிலைக் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வழிகாட்டுதலின்படி பள்ளி மாணவா்- மாணவிகளிடையே தபால் தலை சேகரிப்பை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற கருத்தரங்குக்கு உதவிக் கோட்ட கண்காணிப்பாளா் ஹேமாவதி தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமையாசிரியா் எம்.எஸ். சாந்தினி ஹௌசல், அஞ்சல் உப கோட்ட ஆய்வாளா் மீகா நாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கருத்தரங்கை ஓய்வுபெற்ற அஞ்சல் துறை ராணுவ வீரா் லெப்டினன்ட் கா்னல் சுந்தரம் நடத்தினாா். தபால் தலை சேகரிப்பு பற்றிய வினாக்கள் கேட்கப்பட்டு தபால் துறை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

கண்காட்சியில் 500-க்கும் மேற்பட்ட தபால் தலைகள் இடம் பெற்றிருந்தன. ஆசிரியா்கள், மாணவிகள், அஞ்சல் துறை ஊழியா்கள் பங்கேற்றனா். துறை ஊழியா் பிரியாதேவி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை அஞ்சல் துறை வணிக நிா்வாக அலுவலா் பொ. பொன்ராம்குமாா், ஊழியா்கள், பள்ளி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.