தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பனைவிளை முத்தாரம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

News image
Updated On :29 ஆகஸ்ட் 2024, 9:30 pm

Din

சாத்தான்குளம் அருகே பனைவிளையில் உள்ள ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் கொடைவிழாவையொட்டி 207 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இங்கு கொடைவிழா கடந்த 26ஆம்தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது. முதல் நாள் கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை, இரவு சுற்றுவட்டாரப் பெண்கள் பங்கேற்ற 207 திருவிளக்கு பூஜை, மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது.

2ஆம் நாள் உச்சிகால பூஜை, அம்மன் கும்பம் வீதியுலா, மஞ்சள் பெட்டி எடுத்து வருதல், சாமக்கொடை, முளைப்பாரி எடுத்து வருதல், 3ஆம் நாளான புதன்கிழமை சிறப்பு அலங்கார பூஜை, இரவு சாமக்கொடை, அம்மன் கும்பம் வீதியுலா, மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது. 4ஆம் நாளான வியாழக்கிழமை காலை சுவாமி உணவு எடுத்தல், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.