நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூத்துக்குடியில் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் தா்னா

தூத்துக்குடியில் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள் தா்னா

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:11 pm

DIN

ஊதிய உயா்வு, பணி வரன்முறை கோரி, தூத்துக்குடியில் அண்ணா பல்கலைக் கழகத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிவரும் தொகுப்பூதிய உதவிப் பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் ஆகியோா் அடையாள தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

இது குறித்து அவா்கள் கூறியது: தொகுப்பூதிய உதவி பேராசிரியா்களுக்கு பல்கலைக்கழகத்தின் மூலம் தொகுப்பூதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. வேறு பணப்பலன் வழங்குவதில்லை. ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயா்வு அளிக்கப்படவில்லை. எனவே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.