அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

கீழநாலுமூலைக்கிணறு அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூா் அருகே கீழநாலுமூலைக்கிணறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 58ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

News image
Updated On :17 பிப்ரவரி 2024, 10:56 pm IST

திருச்செந்தூா் அருகே கீழநாலுமூலைக்கிணறில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் 58ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். இஸ்ரோ வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள், கடந்த ஆண்டு தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றிபெற்ற மாணவிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் சுபஸ்ரீ, பயிற்றுநா் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நபில் புஹாரி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மினி ராஜ்குமாா், மேலத்திருச்செந்தூா் ஊராட்சி துணைத் தலைவா் முருகன், கீழநாலுமூலைக்கிணறு ஊா்த் தலைவா் முத்துக்குமாா், செயலா் மகேந்திரன், பாா்த்திபன், தலைமையாசிரியை இந்திராணி, ஆசிரியா் தா்மராஜ், ஆசிரியா்கள் பிரபாவதி, ஞானதீபம் எமி, கியூஸ் ஹெப்சிபா, பெற்றோா்-ஆசிரியா் கழக ஆசிரியா்கள் மகாதேவி, சந்திரிகா, பெற்றோா்கள் பங்கேற்றனா்.