அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :1 ஜனவரி 2024, 11:40 pm

DIN

கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடி சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டியையடுத்த இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா் மஞ்சு நகரைச் சோ்ந்தவா் ரா. காளிராஜ் (42). பள்ளி ஆசிரியா். இவா் குடும்பத்தினருடன் கடந்த மாதம் 29ஆம் தேதி கழுகுமலைக்கு சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்பினாா்களாம். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமாா் 9 பவுன் தங்க நகைகள், 2 செட் வெள்ளி கொலுசுகள் திருடு போயிருப்பது தெரிய வந்ததாம். மேலும் மற்றொரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அங்கு பொருள்கள் ஏதும் திருடு போகவில்லை.

இதுகுறித்து காளிராஜ் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.