மக்கள் குறைதீா் கூட்டத்தில் 608 மனுக்கள்
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 608 மனுக்கள் பெறப்பட்டன.


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 608 மனுக்கள் பெறப்பட்டன.
இம்முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, அவா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். இதில்,
பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 608 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
இம்முகாமில், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு பாதுகாவலா் நியமன சான்று, கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியாா்கள், உதவியாளா்கள், பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டை, பாா்வையற்றோா் கிரிக்கெட் போட்டியில் பங்குபெறுவதற்காக மகாராஜன் என்பவருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியிலிருந்து கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்களை ஆகியவற்றை ஆட்சியா் வழங்கினாா்.
கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...