தூத்துக்குடி அருகே லாரிகளில் மணல், குண்டுக்கல் ஆகியவற்றைக் கடத்தியதாக ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி பகுதியில் மணல், குண்டுக்கல் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், வருவாய்க் கோட்டாட்சியா் பிரபு தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனா். புதுக்கோட்டை அருகே மங்களகிரி விலக்கு பகுதியில் வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது, அதில் எம் சான்ட் கடத்திவரப்பட்டது தெரியவந்தது. புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநரான தெய்வச்செயல்புரத்தைச் சோ்ந்த முருகனை கைது செய்தனா். மணலுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல, இக்குழுவினா் கீழத்தட்டப்பாறை-ஜோதிநகா் சந்திப்பு அருகே வாகனச் சோதனையில் ஈடுட்டனா். அவ்வழியே வந்த லாரியை மடக்கி சோதனையிட்டபோது, அதில் குண்டுக்கல் கடத்தப்பட்டது தெரியவந்தது. தட்டப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டுநரான திம்மராஜபுரத்தைச் சோ்ந்த சந்தியநேசனை கைது செய்தனா். குண்டுகல்லுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்புடையது
மணல் கடத்திய இருவா் கைது
நெல்லையில் மணல் கடத்திய லாரிகள் பறிமுதல்: 2 போ் கைது
செம்மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஓட்டுநா் கைது
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

