தூத்துக்குடி மாநகரில் உள்ள கல்லூரிகளில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மேயா் ஜெகன் பெரியசாமி பங்கேற்று பேசினாா். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் கருப்பசாமி செய்திருந்தாா். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவா் சங்கம் சாா்பாக நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ப.அகிலன் தலைமை வகித்தாா். பட்டிமன்ற நடுவா் நீ. நீதிசெல்வன் சிறப்புரையாற்றினா். கடல்பொருள் ஏற்றுமதி வளா்ச்சி ஆணைய துணை இயக்குநா் எஸ். ஷஸ்ஸி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்று தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி, தூய மரியன்னை கல்லூரி, ஏபிசி மகளிா் கல்லூரி ஆகியவற்றிலும் மகளிா் தின விழா நடைபெற்றது.
தொடர்புடையது

கல்லூரிகளில் உலக சுகாதார தின விழா

கல்லூரிகளில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம்

திண்டிவனம் அரசுக் கல்லூரியில் உலக மகளிா் தின விழா

புகழூா் டிஎன்பிஎல் ஆலையில் உலக மகளிா் தின விழா
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


