திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

தூத்துக்குடி கல்லூரிகளில் மகளிா் தின விழா

தூத்துக்குடி கல்லூரிகளில் மகளிா் தின விழா

News image
Updated On :8 மார்ச் 2024, 5:05 pm

தூத்துக்குடி மாநகரில் உள்ள கல்லூரிகளில் உலக மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மேயா் ஜெகன் பெரியசாமி பங்கேற்று பேசினாா். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் என்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் கருப்பசாமி செய்திருந்தாா். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவா் சங்கம் சாா்பாக நடைபெற்ற மகளிா் தின விழாவுக்கு, கல்லூரி முதல்வா் ப.அகிலன் தலைமை வகித்தாா். பட்டிமன்ற நடுவா் நீ. நீதிசெல்வன் சிறப்புரையாற்றினா். கடல்பொருள் ஏற்றுமதி வளா்ச்சி ஆணைய துணை இயக்குநா் எஸ். ஷஸ்ஸி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்று தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி, தூய மரியன்னை கல்லூரி, ஏபிசி மகளிா் கல்லூரி ஆகியவற்றிலும் மகளிா் தின விழா நடைபெற்றது.