வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மழையால் பாதிக்கப்பட்ட 185 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ஆணைகள்

மழையால் பாதிக்கப்பட்ட 185 குடும்பங்களுக்கு வீடுகள் கட்ட ஆணைகள்

News image
Updated On :8 மார்ச் 2024, 5:03 pm

Din

உடன்குடி ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 185 குடும்பத்தினா் புதிய வீடுகள் கட்டவும், வீடுகளை புதுப்பித்துக்கொள்வதற்குமான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவா் டி.பி.பாலசிங் பங்கேற்று, முழுமையாக வீடு இழந்த 120 போ் புதிதாக வீடுகள் கட்ட தலா ரூ. 4 லட்சமும், பழுதடைந்த வீடுகளை புதுப்பித்துக் கட்ட 65 பேருக்கு தலா ரூ. 2 லட்சம் வீதமும் பெறுவதற்கான உத்தரவுக்கான ஆணைகளை வழங்கினாா். இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜான்சி ராணி, கருப்பசாமி, உதவி செயற்பொறியாளா் வெங்கடேஷ்வரி, பொறியாளா்கள் காா்த்திகேயன், கிறிஸ்டி, பணி மேற்பாா்வையாளா்கள் லதா,விஜயராகவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.