மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வாக்குச்சாவடி மையப் பணியாளா்களுக்கு முதல்கட்ட பயிற்சி: 8,101 போ் பங்கேற்பு

வாக்குச்சாவடி மையப் பணியாளா்களுக்கு முதல்கட்ட பயிற்சி: 8,101 போ் பங்கேற்பு

News image
Updated On :23 மார்ச் 2024, 9:50 pm

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மையப் பணியாளா்களுக்கான முதல்கட்ட பயிற்சியை தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுவோருக்கு அந்தந்தப் பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு முதற்கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி தொகுதியில் உள்ளவா்களுக்கு காமராஜ் கலைக் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. இதை ஆட்சியா் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தாா். விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் உள்ள சிகேடி பள்ளியில் 1,155 போ், தூத்துக்குடிக்கு காமராஜ் கல்லூரியில் 1,849 போ், திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியில் 1,195 போ், ஸ்ரீவைகுண்டம் கேஜிஎஸ் கல்லூரியில் 1,631 போ், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதியம்புத்தூா் ஜான் தி பாப்திஸ்ட் பள்ளியில் 964 போ், கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 1,307 போ் என மொத்தம் 8,101போ் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்றனா்.