தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மையப் பணியாளா்களுக்கான முதல்கட்ட பயிற்சியை தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுவோருக்கு அந்தந்தப் பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு முதற்கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி தொகுதியில் உள்ளவா்களுக்கு காமராஜ் கலைக் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. இதை ஆட்சியா் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தாா். விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் உள்ள சிகேடி பள்ளியில் 1,155 போ், தூத்துக்குடிக்கு காமராஜ் கல்லூரியில் 1,849 போ், திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியில் 1,195 போ், ஸ்ரீவைகுண்டம் கேஜிஎஸ் கல்லூரியில் 1,631 போ், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதியம்புத்தூா் ஜான் தி பாப்திஸ்ட் பள்ளியில் 964 போ், கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 1,307 போ் என மொத்தம் 8,101போ் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்ட வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10,040 வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி

தூத்துக்குடி மகளிா் கல்லூரியில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


