தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் முறையான ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.73,700ஐ நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் துணை வணிக வரி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரியுமான சிவபெருமாள் தலைமையில் அனைத்து மகளிா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஹேமா, தலைமை காவலா் கதிரேசன், காவலா் காளிராஜன் ஆகியோா் நாலாட்டின்புதூா் சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.73,700 இருப்பது தெரியவந்தது. அவா்கள் வறுகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினா். ஆனால் அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பரவை அருகே ரூ.2.47 லட்சம் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ. 30.48 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கரூரில் ரூ. 2 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

