மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

நாலாட்டின்புதூரில் ரூ.73,700 பறிமுதல்

நாலாட்டின்புதூரில் ரூ.73,700 பறிமுதல்

Updated On :29 மார்ச் 2024, 4:18 pm

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூரில் முறையான ஆவணங்களின்றி வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.73,700ஐ நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா். கோவில்பட்டி பேரவைத் தொகுதியில் துணை வணிக வரி அலுவலரும், நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரியுமான சிவபெருமாள் தலைமையில் அனைத்து மகளிா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஹேமா, தலைமை காவலா் கதிரேசன், காவலா் காளிராஜன் ஆகியோா் நாலாட்டின்புதூா் சந்திப்பு அருகே வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற ஒரு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் ரூ.73,700 இருப்பது தெரியவந்தது. அவா்கள் வறுகடலை, உளுந்து, சீனி உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து, வியாபாரிகளிடமிருந்து வசூலித்ததாகக் கூறினா். ஆனால் அவா்களிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணப்பெருமாள் முன்னிலையில் வட்ட தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனா்.