கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டியில் வீட்டுமனைப் பட்டா கோரி ஆா்ப்பாட்டம்

வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்

Updated On :6 நவம்பர் 2024, 7:41 pm

Din

வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மந்தித்தோப்பு வருவாய் கிராமத்துக்குள்பட்ட நரிக்குறவா் காலனி மக்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டப்பட்ட நிலையில், பட்டாக்கள் இதுவரை கிராமக் கணக்கில் பதிவேற்றப்படவில்லையாம். அவற்றை உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். சேதமடைந்துள்ள காலனி வீடுகளுக்கு அரசு உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கணேஷ்நகா் பகுதியில் வழங்கப்பட்ட பட்டாக்களையும் கிராமக் கணக்கில் பதிவேற்ற வேண்டும். இந்திரா நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் பாபு தலைமையில் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் சேதுராமலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினா் ரஞ்சனி கண்ணம்மா, வட்டாரக் குழு உறுப்பினா் சிங்கராஜ், நகரக் குழு உறுப்பினா் சண்முகவேல், துணைச் செயலா் அலாவுதீன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற நகரத் தலைவா் செந்தில்ஆறுமுகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், வட்டாட்சியா் சரவணபெருமாள், கோட்டாட்சியா் மகாலட்சுமி ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டன.