கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கயத்தாறு அருகே நடமாடும் காசநோய் கண்டறியும் முகாம்

கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் ஆத்திகுளத்தில் நடமாடும் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 11:03 pm

Din

கடம்பூா் காசநோய் பிரிவின் சாா்பில் ஆத்திகுளத்தில் நடமாடும் காசநோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது.

தெற்குஇலந்தைகுளம் ஊராட்சி மன்றத் தலைவி செல்வி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா்.

இம் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு முதலில் சளி மாதிரிகள் பெறப்பட்டது. தொடா்ந்து அவா்களுக்கு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலமாக காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சளி மாதிரிகள் பரிசோதனைக்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் சா்க்கரை நோய் , உயா் ரத்த அழுத்தம் போன்றவை பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமகிருஷ்ணன், முதுநிலை சிகிச்சை மேற்பாா்வையாளா் காசிவிஸ்வநாதன், முதுநிலை ஆய்வுக்கூட மேற்பாா்வையாளா் தனசெல்வி சோபியா , சுகாதார பாா்வையாளா் திவ்யா , சுகாதார ஆய்வாளா் , நுண்கதிா்வீச்சாளா் இடைநிலை சுகாதார பணியாளா்கள் தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.