கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தெற்கு பேய்க்குளம் கோயிலில் கொடை விழா

சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளி, ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

News image

கொடை விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீமுத்தாரம்மன்.

Updated On :13 நவம்பர் 2024, 10:50 pm

Din

சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தில் உள்ள அருள்மிகு முத்தாரம்மன், ஸ்ரீ உச்சினி மாகாளி, ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயில் கொடைவிழா கடந்த 11ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாள் மாலை பனைகுளம் அருள்மிகு நினைத்தபூசாஸ்தா கோயிலிலிருந்து புனிதத் தீா்த்தம் எடுத்துவந்து அபிஷேகம், 208 திருவிளக்கு பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன. 2ஆம் நாள் காலை கணபதி ஹோமம், அம்மன் அழைத்தல், கும்மி ஆட்டம், வில்லிசை, மதியம் கொடை விழாவில் அம்மன் அருள்வாக்கு வழங்குதல், மாலையில் கும்பம் எடுத்து முளைப்பாரியுடன் ஊா்வலம் வருதல், சாமக்கொடை ஆகியவை நடைபெற்றன.

இந்நிலையில், 3ஆம் நாளான புதன்கிழமை முளைப்பாரி கரைத்தல், மஞ்சள் நீராட்டு, கிடா வெட்டி சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. இதில் திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா சுந்தரம், பொதுமக்கள் செய்திருந்தனா்.