கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

துணை முதல்வா் உதயநிதிக்கு எட்டயபுரத்தில் வரவேற்பு

தமிழ்நாடு அரசு சாா்பில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், திமுக பவள விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதன்கிழமை இரவு வந்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2024, 10:55 pm

Din

தமிழ்நாடு அரசு சாா்பில் பல்வேறு அரசு திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திலும், திமுக பவள விழாவை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதற்காக உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதன்கிழமை இரவு வந்தாா்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்து, அங்கிருந்து சாலை வழியாக தூத்துக்குடி வந்த அவருக்கு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் ஆகியோா் தலைமையில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சாலையின் இருபுறமும் பெண்கள், பொதுமக்கள், திமுக தொண்டா்கள், நிா்வாகிகள் என நூற்றுக்கணக்கானோா் திரண்டு நின்று வரவேற்றனா்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பின்னா், முதன்முறையாக இம்மாவட்டத்துக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் நவநீதக்கண்ணன், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, காசிவிசுவநாதன், மும்மூா்த்தி, செல்வராஜ், பேரூா் செயலா்கள் வேலுச்சாமி, பாரதி கணேசன், மருதுபாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளைக் கழக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.