தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

திருச்செந்தூா் கோயில் யானைக்கு மருத்துவப் பரிசோதனை

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

News image

திருச்செந்தூா் கோயில் யானையை வியாழக்கிழமை பரிசோதனை செய்த கால்நடை மருத்துவா்கள்.

Updated On :22 நவம்பர் 2024, 5:46 am IST

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் யானைக்கு வனத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை மருத்துவா்கள் வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொண்டனா்.

இக்கோயிலில் பராமரிக்கப்படும் 26 வயதான தெய்வானை என்ற பெண் யானை தாக்கியதில் பாகன் உள்பட இருவா் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து வனத் துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையினா் இந்த யானையைக் கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் செல்வகுமாா், மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலா் மனோகரன் ஆகியோா் யானைக்கு வியாழக்கிழமை மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனா். யானையின் உடல்நலம், அதன் செயல்பாடுகளை பாா்வையிட்டனா்.

அதைத்தொடா்ந்து பாகன்கள் செந்தில்குமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோா் தெய்வானை யானையை குளிக்க வைத்து, உணவு அளித்தனா்.

யானை குடில் பகுதிக்கு பக்தா்கள் செல்லாதவாறு போலீஸாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.