போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை
தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


தூத்துக்குடியில் போக்ஸோ வழக்கில் கைதானவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சோ்ந்த ஜெயவா்ணம் மகன் பொ்க்மான்ஸ் (48). இவா் கடந்த 2022-இல் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், குற்றம்சாட்டப்பட்ட பொ்க்மான்ஸுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...