மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

2-ஆவது நாளாக திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் புதன்கிழமை உள்வாங்கிய கடல் நீா்.

News image

2-ஆவது நாளாக திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்

Updated On :2 அக்டோபர் 2024, 10:15 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் கடல்நீா் உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.

2-ஆவது நாளாக திருச்செந்தூரில்  உள்வாங்கிய கடல்நீா்

2-ஆவது நாளாக திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்

மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌா்ணமி நாள்களில் கடல் நீா் மட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாதத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை இரவு வரை அமாவாசை இருக்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பகலில் திருச்செந்தூா் கோயில் பகுதியில் அய்யா கோயில் அருகே கடல்நீா் உள்வாங்கியது. பின்னா் சற்று நேரத்தில் இயல்நிலைக்குத் திரும்பியது. இதேபோல, 2-ஆவது நாளாக புதன்கிழமையும் அய்யா கோயில் அருகே சுமாா் 50 அடிக்கு கடல்நீா் உள்வாங்கியது.

இதனால் அப் பகுதியில் பாறைகள் வெளியே தெரிந்தன. பின்னா் கடல் இயல்பு நிலைக்கு வந்தது. திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் வழக்கம்போல கடலில் நீராடினா்.